முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

போராட்டத்தினால் இடமாறிய புதுக்கோட்டை ரயில் நிலையம்

மதுரை கோட்ட ரயில்வேயில் முக்கிய ரயில் நிலையமாக புதுக்கோட்டை இணைப்பு  திகழ்கிறது. திருச்சி காரைக்குடி வழித்தடத்தில் அமைந்துள்ள பழமையான இந்த ரயில் நிலையம்1929 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி திறக்கப்பட்டது. திருச்சி - காரைக்குடி ஊர்களுக்கிடையில்  ரயில் இயக்கப்பட்டு அதன்பிறகு 1930 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் மானாமதுரை வரைக்குமாக இருப்புப் பாதை நீட்டிக்கப்பட்டது. தற்போது வட இந்தியாவிலிருந்து  ராமேஸ்வரம் வரை செல்லும் முக்கிய  ரயில்  தடமாக விளங்குகிறது. இந்த மார்க்கத்தின் முக்கிய ரயில் நிலையம் புதுக்கோட்டை.


புதுக்கோட்டையில் ரயில் நிலையம் அமைந்ததற்கும் பின்னே ஒரு போராட்ட வரலாறு உண்டு. முதலில் ரயில் அமையவிருந்த இடம் கீரனூருக்கும் அருகிலுள்ள ஆலவயல். இந்த ஊர் கவிநாடு கண்மாயினால் விவசாயம் செழிப்பாக நடைபெறும் நஞ்சை நிலங்கள் கொண்ட பகுதியாகும். இந்த இடத்தில் ரயில்வே நிலையம் அமைக்க அன்றைய பிரிட்டிஷ் ரயில்வே துறை முடிவுசெய்தது.  கவிநாடு கண்மாய்  விவசாயிகள் இங்கே ரயில் நிலையம் அமைக்கக் கூடாதென எதிர்ப்பு தெரிவித்தார்கள்.  பிறகு வெள்ளனூரில் அமைக்க இடம் தேர்வுசெய்யப்பட்டது. இந்த இடம் மேடான பகுதி, இந்நிலத்தைச் சமப்படுத்த அதிக செலவீனமாகுமென்பதால் அங்கேயிருந்து தற்போதுள்ள இடத்திற்கு ரயில் நிலையம் மாற்றப்பட்டது. இந்த இடம் அப்போது ராஜாக்குளத்துப் பொட்டல் என்று அழைக்கப்பட்டது.  இது புதுக்கோட்டை சமஸ்தானத்திற்குச் சொந்தமான இடமாகும்.

ஆதாரம் - ஜனமித்திரன் இதழ் (1929)

2023- 2024 ஆம் ஆண்டு தமிழகத்யிலுள்ள ரயில் நிலையங்களில் பயணிகள் மூலம் வருவாய் அடிப்படையில் சென்னை ரயில் நிலையம் முதல் இடத்திலும் திருச்சி ரயில் நிலையத்திற்கு ஆறாவது இடமும் புதுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு 75 ஆவது இடமும் பிடித்தது.






 














கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சுதந்திர நாள் அன்று தொடங்கப்பட்ட பத்திரிகை

புதுக்கோட்டைச் செய்தி  பத்திரிகையும் சுதந்திர விநாயகரும்                                     @அண்டனூர் சுரா        1947 ஆகஸ்ட் 15,  இந்திய மக்கள் மனதால் நிரம்பப்பெற்ற நாள். ஆம், அன்றுதான் பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்றது. இந்நாளை உலகம் முழுமையும் வாழ்ந்த இந்தியர்கள் மகிழ்ச்சி பெருக்கெடுத்து பெரும் விழாவாகக் கொண்டாடினார்கள். தமிழகத்தில் இந்தக் கொண்டாட்டம் எந்த வகையிலும் குறைந்ததாக இல்லை. இந்நாளில் புதுக்கோட்டை தனியரசாக இருந்ததால் இங்கே சுதந்திர தினம் எப்படியாகக் கொண்டாடப்பட்டது, அந்நாளில் நடந்தேறிய விழா நிகழ்வுகள் என்ன, சமஸ்தான அரசு இந்தச் சுதந்திரத்தை எப்படியாக எதிர்கொண்டது, இந்நாளை மன்னர் கொண்டாடினாரா என்கிற கேள்விகள் நீண்ட காலமாக மக்களிடம் இருந்து வருகின்றன. இக்கேள்விக்குப் ”புதுக்கோட்டை செய்தி” எனும் மாத இதழ் பதில் சொல்கிறது. புதுக்கோட்டைச் செய்தி இந்திய சுதந்திர நாளைக்  கொண்டாடும்பொருட்டு புதுக்கோட்டை சமஸ்தானம் ‘புதுக்கோட்டைச் செய...

புதுக்கோட்டை சாதிவாரி கணக்கெடுப்பு

உலகின் முதல் மக்கட்தொகை கணக்கெடுப்பு உலகின் முதல் மக்கட்தொகை கணக்கெடுப்பு இஸ்ரேல் நாட்டில் எடுக்கப்பட்டது. இது மக்களின் கணக்கெடுப்பாக இல்லாமல் போர்ப்படை வீரர்களின் எண்ணிக்கையை கணக்கெடுப்பதாக இருந்தது. இஸ்ரேல், ஜூடாக் என இரு நாட்டினர்களுக்கு இடையேயான் போரில்   டேவிட் மன்னனைச் சாத்தான் மன்னன் தோற்கடித்தான். இப்போருக்குப் பிறகு இரு தரப்பிலும் எவ்வளவு பேர் உயிருடன் இருக்கிறார்கள் என கணக்கெடுக்கப்பட்டது. வீரர்களை வரிசையாக நிறுத்தி கணக்கெடுத்தார்கள். வீரர்கள் வாளை வானோக்கி உயர்த்தி உறைக்குள் சொருக வேண்டும். அப்படியாக செய்தால் மட்டும்தான் வீரர் உயிருடன் இருக்கிறார் என்று பொருள். இந்தக் கணக்கெடுப்புப் பணி ஒன்பது மாதங்கள் இருபது நாட்கள் நடைபெற்றது. முதல் மக்கட்தொகை கணக்கெடுப்பு பாபிலோனியாவில் எடுக்கப்பட்டது. கி.மு 3 ஆம் நூற்றாண்டில்   விவசாயம், கடினத் தொழில்கள் மற்றும் இன்னும் பிற வேலைக்காக இந்த கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெர்சியன் பேரரசு,   சீனா, எகிப்திய பேரரசுகள் மக்கட்தொகை கணக்கெடுப்பு நடத்தியது. ரோமன் பேரரசு மன்னன் சர்வியஸ் டூலியஸ் என்பவன் கி.மு ஐந்தா...

உலகப் போர்களில் புதுக்கோட்டை @அண்டனூர் சுரா

உலகப் போரைத் தொடங்கி வைத்த பெருமையும் சிறுமையும் மன்னர் குடும்பத்தைச் சாரும்! ஆஸ்திரியா நாட்டுப் பட்டத்து இளவரசன் பிரான்சிஸ் பெர்டினாந்த் அவருடைய மனைவியுடன் காரில் செல்லும்பொழுது இளவரசன் செர்பியா நாட்டைச் சேர்ந்த ஒருவனால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த படுகொலை நடந்தேறிய நாள் ஜுன் 28, 1914. இதன் காரணமாக ஆஸ்திரியா செர்பியா மீது படையெடுத்தது. நாடு பிடிக்கும் ஆசையிலிருந்த ஜெர்மனி ஆஸ்திரியாவுக்கு ஆதரவாக படையெடுத்தது. ஹங்கேரி, துருக்கி, பல்கேரியா நாடுகள் ஜெர்மனியுடன் இணைந்துகொண்டன. செர்பியாவுக்கு ஆதரவாக பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா, இத்தாலி, ஜப்பான், சீனா நாடுகள் சேர்ந்துகொண்டன.        உலகில் சூரியன் மறையாத நாடு என்று பெயர்பெற்றிருந்த பிரிட்டன் தன் நாட்டைக் காப்பாற்றிக் கொள்வதோடு அதன் காலனி நாடுகளையும் காப்பாற்றியாகவேண்டிய நெருக்கடிக்கு உள்ளானது. ஆகவே இந்திய மாகாண உதவியையும் சமஸ்தான மன்னர்களின் உதவியையும் நாடியது. பிரிட்டிஷ் இந்தியா ஆட்சிப் பகுதியிலிருந்த இளைஞர்கள் பிரிட்டிஷ் படையில் சேர ஆர்வம் காட்டினார்கள். சமஸ்தான அரசுகள் நிதிஉதவி செய்தார்கள். அப்படியாக நிதி உதவ...