முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சித்தன்னவாசலிலிருந்து முரண்படும் சித்தண்ணவாயில்

புதுக்கோட்டை மாவட்டத்தின் சிறப்புகளில் ஒன்று சித்தன்னவாசல். தொன்மையும் பழமையும் புதுமையும் கல்வெட்டுகளாக, ஓவியமாக, சிற்பமாக நிரம்பப் பெற்ற இடம். சித்தன்னவாசலுக்குப்   பல முறை சென்றிருக்கிறேன். இப்பொழுது இருக்கின்ற ஒழுங்குமுறை, முள்வேலித் தடை, நுழைவுக் கட்டணங்கள் அப்போது இல்லை. சமணப் படுக்கையில் ஏறுவதற்குத் தயக்கம் என்பதைத் தவிர வேறெந்த தடையும் இருந்ததில்லை. குன்றில் ஏறி ஐந்து நிமிடங்கள் நண்பர்களோடு படுத்திருந்திருக்கிறேன். முட்புதர், குடைவு, குறுகிய வழி வழியே மலையில் ஏறுகையில் இப்போது நான் ஏறிக்கொண்டிருப்பது ஏழடிப்பாட்டம் என்றோ, குடைவான மலைக்குள் வடிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு படுக்கையின் பெயர் அதிட்டானம் என்றோ, இதில் பதினேழு படுக்கைகள் இருக்கின்றன, அவற்றில் ஆறு படுக்கைகளில் பத்து சமணர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன என்றோ தெரிந்துகொள்ள ஆர்வமிருந்ததில்லை. அதேநேரம் இம்மலையைச் சுற்றிலும் இருக்கின்ற தற்கால மற்றும் நாட்டார் வழிபாட்டு அடையாளங்களுடன் ஓரளவு நான் பரிச்சயமாகியிருந்தேன். சித்தன்னவாசல் என்றால் பலருக்கு முதலில் நினைவுக்கு வருவது ஓவியம்தான். அடுத்து சமணர்களின் படுக்கை. சித்...

இயற்கை வேளாண் விஞ்ஞானிகளை விதைக்'கலாம்'

சா திப்பெருமை பேசுவது போன்றதல்ல ஊர்ப்பெருமை பேசுவது. சாதிப் பெருமை ஊர்க்குடி பெரும் பகுதியினரைப் புறந்தள்ளி தான் சார்ந்த சாதியைப் பீற்றிக்கொள்வது. ஊர்ப் பெருமை பேசுதல் என்பது ஊர்வாழ் மக்கள் அனைவரையும் உள்ளடங்கி பேசுவது. எம் பள்ளியில் இரண்டு மாணவர்கள் ஊர்ப்பெருமை பேசிக்கொண்டு, இருவர் ஊர்களில் எந்த ஊர் முதலில் ஊரானது, என்கிற தீர்வைத் தேடி என்னிடம் வந்தார்கள். இருவரின் ஊர்கள் காட்டுநாவல், துலுக்கன்பட்டி என்பதாக இருந்தது. நான் இருவரையும் வகுப்பறையில் அமர வைத்து மொத்த மாணவர்களுக்கும் தமிழகத்தில் ஊர்கள் தோன்றிய பரிணாமத்தைச் சுருக்கமாகச் சொன்னேன். ஊர்ப் பெயர்கள் முதலில் நிலத்தின் பெயரால் தோன்றியது. உதாரணம் மணமடை, கரம்பைக்குடி,, செங்கமேடு. இங்கு மணல்மடை என்பதுதான் மணமடை. கரம்பை என்பது ஒரு வகை மண். செங்கம் என்பது ஒரு வகை பாறை. பிறகு மரம், செடி, கொடிகளின் பெயரால் தோன்றியது. விராலிமலை, கிளாங்காடு. விராலி, கிளா   இரண்டும்   மரங்கள். பிறகு நீர்நிலைகளைக் கொண்டு ஊர் தோன்றியது. மருங்கூரணி, புனல்குளம். இங்கு ஊரணி என்பதும் குளம் என்பதும் நீர்நிலை. பிறகு கோட்டை ஊர்கள் தோன்றின. கண்டராக்கோட்டை. ...