முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முதுகுளம் - அதைச் சுற்றியுள்ள ஊர்களின் பெயர்க் காரணங்கள்

இன்றைய புதுக்கோட்டை-தஞ்சாவூர் மாவட்டங்கள் சந்தித்துக்கொள்ளும் பகுதி ஒரு காலத்தில் முல்லை நிலமாக இருந்திருக்கிறது. முல்லை என்பது காடுகள். சோழர்களின் ஆட்சிக் காலத்திற்கும் முன்பு இப்பகுதிகள் கானாடு, கோனாடு என அழைக்கப்பட்டன. புறநானூறு 150 ஆவது பாடல் குறிப்பிடும் “ காட்டு நாட்டோம் ” என்கிற வரியும் நற்றிணை 59 ஆவது பாடல் குறிப்பிடும் “வன்புலக் காட்டு நாட்டதுவே” என்கிற வரியும் இன்றைய புதுக்கோட்டை பகுதியைக் குறிப்பிடும் வரிகளென ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். காட்டு நாடு என்பதே கானாடு. இந்நிலம் பெரும் உட்பிரிவுக் கொண்டு கோனாடு ஆனது. பிறகு கானாடு என்பதன் எல்லை சுருங்கி கோனாடு பெரும் பரப்பானது. கோனாடு வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டன. சோழவளநாடு, ஜெயசிங்ககுலவளநாடு, பாண்டிக்குலாசனி வளநாடு,…இப்படியாக. கானாடு பனங்காட்டு நாடு, செங்காட்டு நாடு ஆகின. இன்றைய புதுக்கோட்டையின் கந்தர்வகோட்டை பகுதிகள் கோனாடு பரப்பிற்குள் அடைபடுவதற்கும் முன்பு கானாடாக இருந்தவை என்பதை இன்றைய ஊர்ப்பெயர்களைக் கொண்டு புரிந்துகொள்ளலாம். புதுக்கோட்டை மாவட்டத்தின் வடக்கு எல்லை ஊர்களாக புனல்குளம், முதுகுளம், காடவராயன்பட்டி, மஞ்சப்பேட்...

புதுக்கோட்டையின் முதல் ஆவணமும் முதல் வரலாறும்

புதுக்கோட்டை வரலாறு குறித்து எழுதுகையில், வாசிக்கையில், தேடுகையில் பிளாக்பர்ன் என்கிற பெயரைத் தவிர்த்துவிட்டு புதுக்கோட்டை வரலா ற் றை உள்வாங்க முடியாது. யார் இந்த பிளாக்பர்ன்?   புதுக்கோட்டை வரலாற்றில்   ப்ளாக்பர்ன் எனும் பெயரில் இருவர்   இடம் பெறுகிறார்கள். ஒருவர் சர். வில்லியம் ப்ளாக்பர்ன் , மற்றொருவர் ஜான் ப்ளாக்பர்ன் . முன்னவர் தஞ்சாவூரில்   ஆங்கிலேய அரசின் ரெசிடெண்ட் அதிகாரியாக இருந்தவர். புதுக்கோட்டை சமஸ்தானம் நிர்வாக குழறுபடியால் கலகமும் கலவரமும் நிகழ்ந்தேறியது. அப்பொழுது புதுக்கோட்டையின் பொறுப்பு ரெசிடெண்ட் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர். புதுக்கோட்டைக்கு ஆங்கிலேய அரசால் நியமிக்கப்பட்ட முதல் ஆங்கிலேய அதிகாரி இவர். புதுக்கோட்டையுடன் தொடர்புடைய இவரது காலம் பிப்ரவரி 1807 முதல் ஆகஸ்ட் 6, 1809. பிறகு மார்ச்5, 1810 முதல் மார்ச் 3, 1823. இடைப்பட்ட காலத்தில் கேப்டன் புட்லர் பொறுப்பு அதிகாரியாக இருந்திருக்கிறார். ஜான் ப்ளாக்பர்ன் எனும் அரசியல் பிரதிநிதி. ஜான் ப்ளாக்பர்ன் என்பவர் யார்? இவர் வில்லியம் ப்ளாக்பர்னின் சகோதரர். ஆங்கிலேய அரசால் புதுக்கோட்டைக்கு நியமிக்க...