முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நெடுவாயில் பதிவும் நெடுவாசல் வரலாறும்

ஊர்சுற்று இலக்கியம் SAVE NEDUVASAL , இது உலக க் கண்களை ஒற்றைப் புள்ளியில் குவித்த ச் சொற்றொடர். வெளிமாநிலத்தில், வெளிநாட்டில் புதுக்கோட்டை என்று சொன்னால் முன்பெல்லாம் காட்டிக்கொடுத்த ஊரா, எனக் கேட்பார்கள். நெடுவாசல் ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான போராட்டத்திற்குப் பிறகு புதுக்கோட்டை என்றால் நெடுவாசல் புதுக்கோட்டையா, எனக் கேட்குமளவிற்கு அவ்வூர் பிரபலமும் பரபரப்பும் கொண்ட ஊரானது. இன்றைக்கும் அந்தப் பரபரப்பு இருக்கிறது. நாளைக்கும் இருக்கும். நெடுவாசல் குறித்துப் பேசுகையில் அணு உலை குறித்து ஓர் அணு விஞ்ஞானி சொன்ன ஒரு வாசகம் நினைவுக்கு வருகிறது. “ எப்பொழுதேனும் வெடிக்கலாம் எனும் படியான ஓர் அணுகுண்டு உண்மையில் எப்பொழுதும் வெடிக்கும் குண்டுதான்”. நெடுவாசலில் நடந்தேறிய நீண்ட நெடிய மக்கள் போராட்டத்திற்குப் பிறகு ஹெட்ரோ கார்பன் திட்டம் ரத்து செய்யப்படுகிறது, என அரசு அறிவித்துவிட்டது. ஆனாலும் அவ்வூரில் நிறுத்தப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகள் இன்னும் அகற்றப்படவில்லை. நெடுவாசலில் ஏன் ஆழ்த்துளைகள்? புதுக்கோட்டை மாவட்டத்தின் செழிப்பான பகுதி ஆலங்குடி. அதற்குள்தான் இருக்கிறது நெடுவாசல். ஒரு நிலம் செழிப்பா...

புதுக்கோட்டைக்குப் பெயர் சூட்டியது யார்?

                பு துக்கோட்டைக்குப் புதுக்கோட்டை என்று யார் பெயர் சூட்டியிருப்பார்? மன்னரா, மக்களா? இல்லை, அதுவாகவே அந்தப் பெயரை சூட்டிக்கொண்டதா? புதிய கோட்டை எனப் பொருள்படும் இக்கோட்டையில் இதற்கும் முன்பு பழைய கோட்டைகள் இருந்தனவா? இருந்திருந்தால் எத்தனை கோட்டைகள் இருந்தன, போன்ற கேள்விகளிலிருந்துதான் புதுக்கோட்டைக்கான பெயர்க் காரணத்தைக் நாம் கண்டடைய முடியும். கோட்டை என்றால் கோட்டைகள்தானா?. கோட்டை என்பதற்குப் பல பொருள்கள் நம்மிடம் உண்டு. வானத்தில் ஒரு திசையில் திரளும் மேகத்திற்குக் கோட்டை என்று பெயர். "வானம் கோட்டக் கட்டுது. மழை வெளுத்து வாங்கப்போவுது"   என்பதான சொல்லாடல் இன்றைக்கும் உண்டு. சிலம்பாட்டத்தில் ஒருவர் பல சிலம்புகளின் தாக்குதலை எதிர்கொண்டு மறித்துக்கட்டுவதற்கு கோட்டை என்றே பெயர். பெரிய மரங்களைக் கொண்ட காட்டிற்குக் கோட்டை என்று பெயர். வீட்டின் உட்கூடு கோட்டை. இருபத்தொரு மரக்கால்கள் கொண்ட அளவையின் அலகு கோட்டை. நில அளவையாகவும் கோட்டை இருக்கிறது. ஓர் அரண்மனை எழுப்பி அத்துடன் தேர், யானை, படைகள் சுற்றிவரவும், அவற்றை நிறுத்தவும் தேவையான...