1990-92 ஆம் ஆண்டு கால இடைவெளியில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்தவர் மரியாதைக்குரிய ஷீலாராணி சுங்கத் அவர்கள். இவரால் தொடங்கப்பட்ட சைக்கிள் ஓட்டும் இயக்கம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் மக்கள் இயக்கமாக மாறியது. இந்த இயக்கம் வீட்டுக்குள் நீண்டகாலமாக அடைப்பட்டிருந்த பெண்களைச் சைக்கிள் ஓட்ட வைத்ததுடன் சமூகப் புரட்சிக்கும் பெண் முன்னேற்றத்திற்கும் வழிவகுத்தது. இந்த இயக்கத்தின் வெற்றிதான் இன்றைய தமிழ்நாடு அரசின் உயரிய திட்டமான அரசுப் பள்ளி மாணவிகளுக்கு வழங்கும் விலையில்லா சைக்கிள் திட்டம் என்றும்கூட சொல்லலாம். இவருடனான நேர்காணல் குங்குமம் தோழி ஜூலை 1-15,2024 இதழில் வெளிவந்திருக்கிறது. அந்த நேர்காணல் இதோ: " 1991 இல் இந்தியாவில் கல்வி அறிவின்மை விகிதம் மிகவும் குறைவு. அதிலும் நான் மாவட்ட ஆட்சியராக இருந்த புதுக்கோட்டை மாவட்டம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. குறிப்பாக இங்கு பெண்களுக்குக் கல்வி என்பது கேள்விக்குறியாக இருந்தது. இங்குள்ள கிராமத்துப் பெண்கள் படிப்பைவிட தங்களின் அன்றாட வீட்டு வேலைகளுக்குதான் அதிக முக்கியத்துவம் அளித்து வந்தார்க...
அண்டனூர் சுரா