முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புதுக்கோட்டையின் முதல் பேருந்து சேவை

புதுக்கோட்டை  திருமயம் சாலையில் டிவிஎஸ் என்றொரு பேருந்து நிறுத்தம் இருக்கிறது. புதுக்கோட்டை பொதுமக்களுக்கான பேருந்து சேவையுடன் நெருங்கிய தொடர்புகொண்ட நிறுத்தம் இது. புதுக்கோட்டையின் முதல் பேருந்து நிறுத்தம் என்றும்கூட இதைச் சொல்லலாம். பேருந்து இன்று பெண்களுக்கான இலவச ஊர்த்தியாக இ யங்கிக்கொண்டி ருக்கிறது. ஒரு காலத்தில் பேருந்தில் பயணம் செய்வதற்கு விசா தேவையாக இருந்தது. மேலும் பேருந்து பயணிகளுக்குச் சிற்றுண்டி வழங்கும் முறை இருந்தது. இதெல்லாம் நடந்தது வெளிநாட்டிலல்ல, நமது புதுக்கோட்டையில். பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் பேருந்து சேவை   டி.வி.எஸ் என்றதும் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது இரு சக்கர வாகனமான டி.வி.எஸ்தான். இரு சக்கரம் வாகனத்தின் பரிணாம வளர்ச்சிதான் பேருந்து. ஆனால் டி.வி.எஸ் நிறுவனம் இரு சக்கர வாகனம் எனும் மோட்டார் பைக் தயாரிப்பு சேவையைத் தொடங்குவதற்கு முன்பு பேருந்து சேவையைத் தொடங்கியதும் சாதி, மதம் பாகுபாடற்று மக்கள் அதில் பயணம் செய்யும் வகையில் பேருந்தை இயக்கியதும் பலரும் மறந்த செய்திகளில் ஒன்றாகும்.   திருக்குறுங்குடி வெங்கரம் சுந்தரம் என அழைக்கப்பட்ட டி.வி.சு...

புதுக்கோட்டையில் புது சகாப்தம்

புதுக்கோட்டை சமஸ்தானம் இந்திய யூனியனுடன் இணைந்த தருணம் முக்கியமானது. இந்தத் தருணத்தை, புதுக்கோட்டை ராயபுரத்தில் தொடங்கி சென்னையிலிருந்து வெளிவந்த  சக்தி மாத இதழ் ( சர்வசித்து மலர் -14,  பங்குனி இதழ் -11)  புதுக்கோட்டையில் புது சகாப்தம் என்கிற தலைப்பில் தலையங்கம் எழுதியது.  அந்தத் தலையங்க கட்டுரையை அப்படியே தருவதற்கும் முன்பு சக்தி இதழ் குறித்து ஒரு பார்வை பார்த்துவிடுவோம். சக்தி இதழ் , நிர்வாக ஆசிரியர் -  வை.கோவிந்தன்.  இந்த இதழினால் சக்தி வை. கோவிந்தன் என அழைக்கப்பட்டார். பிறப்பு -   ராயவரம் ( திருமயம் ). 1939 ஆம் ஆண்டு சக்தி இதழ் தொடங்கப்பட்டது. இதழின் முதல் ஆசிரியர் -  கவியோகி சுத்தானந்தப் பாரதியார் .  இவரைத் தொடர்ந்து  தி.ஜ.ர., கு.அழகிரிசாமி, தொ.மு.சி.ரகுநாதன், ரா.கி.ரங்கராஜன், தமிழ்வாணன், ம.ரா.போ.குருசாமி, அழ.வள்ளியப்பா ஆகியவர்கள் இருந்துள்ளார்கள்.  பாவேந்தர் பாரதிதாசன், ‘கவிமணி‘ தேசிக விநாயகம், ‘நாமக்கல் கவிஞர்’ வெ.இராமலிங்கம், டி.கே.சி., வெ.சாமிநாதசர்மா, மு.அருணாசலம், எஸ்.வையாபுரிப் பிள்ளை உள்ளிட்டோர் ‘சக்தி’ ...

புதுக்கோட்டையின் முதல் மின்சார கிராமம்

       தமிழகத்தின் முதல் மின்சாரம் 1908 ஆம் ஆண்டை தமிழகத்தின் ஒளியாண்டு என்று சொல்லலாம். மின்சார விளக்குகள் தமிழ்நாட்டில் ஒளிர்ந்த ஆண்டு இது.   தமிழ்நாட்டில் முதல் மின்சார உற்பத்தி குன்னூர் அருகே காட்டேரி அருவியிலிருந்து தயாரிக்கப்பட்டது. குன்னூர் தேயிலை தொழிற்பேட்டை என்பதால் தேயிலையை அரைத்து தூளாக்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இந்த மின்சாரம் பெரிதும் பயன்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியின் தென்னிந்திய தலைநகர் சென்னைப் பட்டணத்திற்கு மின்சாரம் வந்தது இதற்குப் பிறகுதான்.   1927 ஆம் ஆண்டு   அன்றைய ஆங்கிலேய அரசால் மின்சாரத்துறை உருவாக்கப்பட்டது. இந்தத் துறையின் கீழ் பைக்காரா நீர்மின் நிலையம் தொடங்கப்பட்டு    பிரிட்டிஷ் பொறியாளர் சர். ஜான் ஜி. ஹென்றி ஹாவர்ட் அவர்கள்   சென்னை மாநில மின்சாரத் துறையின் முதல் தலைமைப் பொறியாளராக நியமிக்கப்பட்டார். இந்திய விடுதலைக்குப் பிறகு 1948 ஆம் ஆண்டு மெட்ராஸ் மாநில மின்சார வாரியம் உருவாக்கப்பட்டது. இந்த வாரியத்தின் தலைமை பொறியாளர் பத்மஸ்ரீ   வி.பி. அப்பாதுரை அவர்கள். புதுக்கோட்டையின் முதல் மின்சார கிராமம் த...