முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

போராட்டத்தினால் இடமாறிய புதுக்கோட்டை ரயில் நிலையம்

மதுரை கோட்ட ரயில்வேயில் முக்கிய ரயில் நிலையமாக புதுக்கோட்டை இணைப்பு  திகழ்கிறது. திருச்சி காரைக்குடி வழித்தடத்தில் அமைந்துள்ள பழமையான இந்த ரயில் நிலையம்1929 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி திறக்கப்பட்டது. திருச்சி - காரைக்குடி ஊர்களுக்கிடையில்  ரயில் இயக்கப்பட்டு அதன்பிறகு 1930 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் மானாமதுரை வரைக்குமாக இருப்புப் பாதை நீட்டிக்கப்பட்டது. தற்போது வட இந்தியாவிலிருந்து  ராமேஸ்வரம் வரை செல்லும் முக்கிய  ரயில்  தடமாக விளங்குகிறது. இந்த மார்க்கத்தின் முக்கிய ரயில் நிலையம் புதுக்கோட்டை. புதுக்கோட்டையில் ரயில் நிலையம் அமைந்ததற்கும் பின்னே ஒரு போராட்ட வரலாறு உண்டு. முதலில் ரயில் அமையவிருந்த இடம் கீரனூருக்கும் அருகிலுள்ள ஆலவயல். இந்த ஊர் கவிநாடு கண்மாயினால் விவசாயம் செழிப்பாக நடைபெறும் நஞ்சை நிலங்கள் கொண்ட பகுதியாகும். இந்த இடத்தில் ரயில்வே நிலையம் அமைக்க அன்றைய பிரிட்டிஷ் ரயில்வே துறை முடிவுசெய்தது.  கவிநாடு கண்மாய்  விவசாயிகள் இங்கே ரயில் நிலையம் அமைக்கக் கூடாதென எதிர்ப்பு தெரிவித்தார்கள்.  பிறகு வெள்ளனூரில் அமைக்க இடம் தேர்வுசெய்யப...

ஆனந்த விகடன் பெருமைபடுத்திய தொல்லியல் ஆர்வலர்

புதுக்கோட்டை கவிஞர்  பீர்முகமது அவர்களை நான் இலக்கியவாத நல்லிணக்கம் கொண்டவர் என்பேன். ஓர்  இலக்கிய அமைப்பில்  அவர் பொறுப்பாளராக இருந்தாலும்  புதுக்கோட்டையில் நடைபெறும்  அனைத்து இலக்கிய அமைப்பு நிகழ்வுகளிலும்  இலக்கியத்தின் மீதுள்ள ஆர்வம் மற்றும் ஈர்ப்புப் புலத்தால் கலந்துகொள்கிறவர். இலக்கிய விழா அழைப்பிதழ்களில் தன் பெயரைத் தேடும் ஆளுமைகளுக்கு மத்தியில் விழா நடைபெறும் இடம், தேதி, நேரம் என்னவென்று தேடுகிறவர்.  மூன்று நான்கு இதழ்களோடு வெளிவந்து நின்றுபோய்விட்ட மணிப்புறா எனும் மாத இதழின் துணை ஆசிரியராக இருந்தவர். இவரது சமீப அடையாளம் தொல்குடிப் பொருட்களைச் சேகரித்து அதன் பெருமைகளைப் பட்டித்தொட்டியெங்கும் கொண்டுபோய் சேர்க்கும் தொல்லியல் ஆர்வலர்.  இவர் பல நூறு பண்டைய பொருட்களைச் சேகரித்து அவ்வபோது காட்சிப்படுத்திவருகிறார். இவரது தொல்லியல் ஆர்வத்தை அங்கீகரிக்கும் பொருட்டு  3.4.2024 நாளிட்ட  ஆனந்த விகடன் இதழ் இவர் குறித்து எழுதியுள்ள பத்தி.  " புதுக்கோட்டையைச் சேர்ந்த பீர் முகமது, ஒரு தொல்லியல் ஆர்வலர். பழைமையான மண்பாண்டங்கள், பித்தளை மற்ற...

புதுக்கோட்டையின் முதல் தமிழ் அமைப்பு

  தமிழ்நாடு அரசின் செய்தி மக்கட்தொடர்பு துறையினரால் தமிழரசு எனும் இதழ்  வெளிவந்துகொண்டிருக்கிறது. 16.04.1983 நாளிட்ட தமிழரசு இதழ் வாசிக்கக் கிடைத்தது. இந்த இதழ்  புதுக்கோட்டை மாவட்ட சிறப்பு இதழாகும். இந்த இதழ் புதுக்கோட்டை சமஸ்தான காலத்திலும் அதற்குப் பிறகும்  புதுக்கோட்டையில்  தமிழ் வளர்த்த அமைப்புகளைப் பட்டியலிட்டுள்ளது. மேலைச்சிவபுரி புதுக்கோட்டை மாவட்டத்தின் தென் எல்லையில் அமையப்பெற்ற சிற்றூர் மேலைச்சிவபுரி. கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரி ஆண்ட பறம்புமலையின் சாரலில் இந்த ஊர் அமைந்துள்ளது. நகரத்தார்கள் பெரும்பான்மையாக வாழும் ஊர். இவ்வூர்  சான்றோர்கள்  சிலர் கூடி தமிழ் வளர்க்கவும் தமிழ்ச்சான்றோர்களை அடையாளம் கண்டு வளர்த்தெடுக்கவும் சன்மார்க்க சபை எனும் ஓர் அமைப்பைத் தோற்றுவித்தார்கள். புதுக்கோட்டை சமஸ்தான காலத்தில் தோற்றுவித்த முதல் தமிழ்ச்சபை இதுவாகும். மேலும் இந்த சபை புதுக்கோட்டை சமஸ்தானத்தின் தமிழ்ச்சங்கம் என்றும்  அழைக்கப்பட்டது. வ. பழ. சா குடும்பம் மேலைச்சிவபுரியில் வ.பழ.சா குடும்பம் பாரம்பரியமிக்கது. இந்தக் குடும்பத்தின் மரபில் பிறந்...