முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புதுக்கோட்டை சமஸ்தான கடைசி கால நிலவரைப்படம்

   1931 ஆம் ஆண்டு   எஸ் . தண்டபாணி ஐயர் வரைந்த புதுக்கோட்டை சமஸ்தான நிலவரைப்படம் இது. புதுக்கோட்டை அருகமை மாவட்டங்களான திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் ஆகியவை  தாலுக்கா என்கிற அளவில் குறிக்கப்பட்டுள்ளன.  இந்த வரைபடத்தில் முக்கிய ஊர்களாக கரம்பக்குடி, குன்றாண்டார்கோவில், கீரனூர், குடுமியான்மலை, செங்கிரை, வாராப்பூர்,நீர்பழனி,  குளத்தூர், ஆலங்குடி, திருமயம்,பொன்னமராவதி, காரையூர் ஊர்கள் குறிக்கப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை நகரத்தின் நிலவரைப்படம்

திரு. ராவ் சாகேப் எஸ்.தண்டபாணி ஐயர் வரைந்த புதுக்கோட்டை நகரத்தின் நிலவரைப்படம் இது. புதுக்கோட்டை சமஸ்தானமாக இருந்த காலத்தில் வரையப்பட்ட கடைசி நிலவரைப்படமாக இது இருக்கக்கூடலாம் . 1933 ஆம் ஆண்டுவாக்கில் இது வரையப்பட்டது. 1931 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புதுக்கோட்டை மக்கட்தொகை கணக்கெடுப்பு பதிவேட்டில் இந்த நிலவரைப்படம் இடம் பெற்றுள்ளது.