முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புதுக்கோட்டை மாவட்டமும் அதிகாரப்பூர்வ தொடக்கமும்

புதுக்கோட்டை தனிமாவட்டமாக ஜனவரி 14, 1974 அன்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. ஆயினும் மாவட்டம் முறையாக உதித்த நாள் ஜனவரி 20, 1974. புதுக்கோட்டை உதய நாள் விழா எப்படியாக நடந்தது என்பதை இன்றைய தலைமுறைக்கு தெரிவிக்கும் பொருட்டு தினமலர் பத்திரிகை வெளியிட்ட செய்தியை அப்படியே தருகிறேன். புதுக்கோட்டை மாவட்டம் இன்று உதயம் திருச்சி ஜனவரி 20 , 1974. தமிழகத்தில் இன்று புதுக்கோட்டை மாவட்டம் உதயமாகிறது. தமிழகத்திலேயே சுதந்திரம் பெறுவதற்கு முன்பு இந்த புதுக்கோட்டை பிரதேசம் மன்னர் ஆட்சியில் இருந்தது. இந்திய சமஸ்தானங்கள் சுதந்திரப் போராட்டத்திற்குப் பிறகு காலம் சென்ற சர்தார் வல்லபாய் பட்டேல் முயற்சியால் ஒருங்கிணைந்தது.  புதுக்கோட்டை சமஸ்தானமும் முதன் முதலில் ஒருங்கிணைந்த பெருமையைப் பெற்றது. பிறகு திருச்சி மாவட்டத்துடன் இணைத்து நிர்வாகம் நடத்தப்பட்டது. புதுக்கோட்டை மக்களின் நெடுநாளைய விருப்பம் இன்று நனவாகிறது. தனி மாவட்டமாக தமிழக அரசு முடிவு எடுத்து இன்று (ஜனவரி 20) புதுக்கோட்டையைத் தனி மாவட்ட ஆரம்பத்தை தமிழக முதல்வர் உயர்திரு கருணாநிதி துவக்கும் விழா காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. விழாவிற்கு மரா...

அரிமளம் அரிமழமாகிப் போன அரிமணம்

  புதுக்கோட்டையிலிருந்து பதினெட்டு கல் தூரத்தில் இருக்கிறது, அரிமழம். இவ்வூர் அரிமளம் என்றும் அரிமழம் என்றும் அழைக்கப்படுகிறது. ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார் அரிமலம் என்கிறார். மளம் என்பதற்கு மணம் என்றும் மழம் என்பதற்கு இளமை என்றும் பொருள். இவ்வூரார்களிடம் பெயர்க்காரணம் கேட்கையில் அரி என்றால் சிங்கம் என்றும் மழம் என்றால் வீரர்கள் என்றும் சிங்கம் போன்ற வீரர்களைக் கொண்ட மறவர் ஊர் என்று சொல்கிறார்கள். சிங்கத்தைக் குறிக்கும் அரி என்கிற சொல் வடமொழி. தமிழ்ச் சொற்கள் அரி என்பதற்கு நெற்கதிர், வண்டு, கொடு,பகைவன், பாம்பு, அழகு, மரவயிரம், தேர், பரற்கல், பறை,    மூங்கில், குரங்கு, மழைத்தூவல், தவளை, விதை, சிலம்பின் பரல் என்கின்றன.  மேலும்  அரி என்பதற்கு பனை, பனங்கள், பனங்கருக்கு (சூடாமணி, பிங்கல நிகண்டு), நெல்லுக்கு அரி என்றொரு பெயருண்டு ( பிங்கல நிகண்டு) நெற்கதிரை அறுத்து வரிசையாக வைப்பதற்கு பெயர் அரி. நெற்குவியல் - அரி. கதிர் அறுக்கும் பருவத்தை அரி என்கிறது பெரும்பாணாற்றுப்படை. அதாவது 'அரி புகு பொழுதின் இரியல் போகி'.    இதுதவிர தற்கால அகராதிகள்    ...